உள்ளூர் செய்திகள்
பயிற்சி மையத்தை திறந்து வைத்து சிவா எம்.எல்.ஏ. பேசிய போது எடுத்த படம்.

காலி பணியிடங்களை கட்டாயம் நிரப்ப வேண்டும்: சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

Published On 2022-04-17 05:57 GMT   |   Update On 2022-04-17 05:57 GMT
புதுவை அரசு துறைகளில் 10 ஆயிரம் காலி பணியிடங்களை அடுத்த ஆண்டுக்குள் கட்டாயம் நிரப்ப வேண்டும் என்று சிவா எம்.எல்.ஏ. வலியுறுத்தி உள்ளார்.
புதுச்சேரி:

பாகூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் ஏற்பாட்டில் பாகூர் தொகுதியை சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில், புதுவை அரசின் வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சி மையம் தொடங்க முடிவு செய்யப்பட்டது. 

இதற்கான தொடக்க விழா பாகூரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவுக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கோதண்டம் வரவேற்றார். 

சிறப்பு அழைப்பாளராக எதிர்கட்சி தலைவர் சிவா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு போட்டி தேர்வுக்கான பயிற்சி மையத்தை தொடங்கி வைத்து வாழ்த்தி பேசினார்.அவர் பேசியதாவது:&

பாகூர் எம்.எல்.ஏ. புதுவை அரசிடம் அதிக நிதி பெற்று தனது தொகுதியில் பல்வேறு வளர்ச்சி பணி-களை செய்து வருகிறார். சட்டசபையில் காலிப்பணியிடங்களை தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம்.

புதுவை அரசு காலி பணியிடங்களை நிரப்பி, 10 ஆயிரம் பேருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது கட்டாயம். இந்த வருடம் இல்லாவிட்டாலும், அடுத்த வருடம் கட்டாயம் நிரப்பிட வேண்டும்.

அரசு துறைகளில் பணி ஓய்வு பெறுவோர் அதிகமாக உள்ளனர். குறிப்பாக, எல்.டி.சி., யூ.டி.சி., பற்றாக்குறை உள்ளது. துணை தாசில்தார் எடுத்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டது. 

காவல் துறையில் குறைந்த அளவிலேய பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இன்னும், ஊர்காவல் படை, ஐ.ஆர்.பி.என். உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் எடுக்க வேண்டியது உள்ளது.

எனவே, செந்தில்குமார் எம்.எல்.ஏ., முயற்சியால் தொடங்கப்பட்டுள்ள இந்த பயிற்சி மையத்தை பயன்-படுத்தி இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெற வேண்டும். பாகூர் தொகுதி  வளர்ச்சியை நோக்கி செல்கிறது. இது அடுத்த ஆண்டு தெரியும்.

இவ்வாறு அவர் பேசி-னார்.

இந்த பயிற்சி மையத்தில், புதுவை அரசின் எல்.டி.சி., யூ.டி.சி. உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான பயிற்சி அளிக்கப்படுகிறது. 

இந்நிகழ்ச்சியில், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து முன்னாள் துணை தலைவர் தவமுருகன், தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாஸ்கரன், அரி, கீர்த்தி, பிரகாசம், கிரி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

முடிவில் தி.மு.க. தொகுதி செயலாளர் பாண்டு அரிக்கிருஷ்ணன் நன்றி கூறினார்.
Tags:    

Similar News