செய்திகள்
விபத்து பலி

நாமக்கல் அருகே கார் மோதி தொழிலாளி பலி

Published On 2021-04-05 09:09 GMT   |   Update On 2021-04-05 09:09 GMT
நாமக்கல் அருகே கார் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாமக்கல்:

நாமக்கல் அருகே உள்ள பாப்பிநாயக்கன்பட்டியில் வசித்து வந்தவர் குமரவேல் (வயது 43). கூலித்தொழிலாளி. இவர் நேற்று காலை அப்பகுதியில் நாமக்கல்- சேலம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த குமரவேல் சம்பவ இடத்திலேயே இறந்தார். இந்த விபத்து குறித்து நாமக்கல் நல்லிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News