செய்திகள்
கோப்பு படம்

கோத்தகிரியில் அக்காள் வீட்டுக்கு வந்த தம்பி குத்திக்கொலை - தொழிலாளி கைது

Published On 2019-10-01 11:24 GMT   |   Update On 2019-10-01 11:24 GMT
கோத்தகிரியில் அக்காள் வீட்டுக்கு வந்த தம்பியை குத்திக்கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோத்தகிரி:

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி செம்மநாரையை சேர்ந்தவர் ரங்கன் (வயது 21). கூலித்தொழிலாளி. இவரது மனைவி நீலி (19). இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு நீலியின் தம்பி பிரகாஷ் (18) உறவினராக வீட்டுக்கு வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு ரங்கனுக்கும், பிரகாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த ரங்கன் மனைவியின் தம்பியை கத்தியால் குத்தினார். கழுத்தில் பலத்த காயம் அடைந்த பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் கிடைத்ததும் கோத்தகிரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மார்ட்டின் லூதர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிரகாசின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்து ரங்கனை போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News