ஆன்மிகம்
பிரம்மபுரம் சஞ்சீவிராய மலைபிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் சிறப்பு பூஜை
காட்பாடி பிரம்மபுரம் சஞ்சீவிராய மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது.
புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை முன்னிட்டு காட்பாடி பிரம்மபுரம் சஞ்சீவிராய மலையில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நேற்று நடந்தது. அதைத்தொடர்ந்து பிரசன்ன வெங்கடேச பெருமாளுக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு மலர் மாலைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது..
இதில் முககவசம் அணிந்தபடி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் சுந்தர்ராஜி செய்திருந்தார்.
இதில் முககவசம் அணிந்தபடி திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை திருப்பணி குழு தலைவர் சுந்தர்ராஜி செய்திருந்தார்.