செய்திகள்
அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தோடும் தண்ணீரில் பொதுமக்கள் உற்சாகமாக குளித்த காட்சி.

தொடர் மழையால் அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது- விவசாயிகள் மகிழ்ச்சி

Published On 2020-11-19 09:01 GMT   |   Update On 2020-11-19 09:01 GMT
தொடர் மழையால் அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேப்பந்தட்டை:

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்த அரும்பாவூர் பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்மழை பெய்து வருகிறது. குறிப்பாக அரும்பாவூர் ஒட்டியுள்ள பச்சை மலை மீது பலத்த மழை பெய்துள்ளது. இதனால் அங்கிருந்து மழை நீர் கரைபுரண்டு கல்லாற்றின் வழியாக அரும்பாவூர் பெரிய ஏரிக்கு வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை அரும்பாவூர் பெரிய ஏரி நிரம்பி வழிந்தோடியது. இதனால் மகிழ்ச்சி அடைந்த அரும்பாவூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் ஏரியில் ஆனந்தமாக குளித்தனர். மேலும் அரும்பாவூர் பெரிய ஏரியில் இருந்து வழிந்தோடும் நீர் சித்தேரிக்கு வந்து கொண்டு இருக்கிறது.

தொடர்ந்து மழைபெய்தால் இன்னும் 2 நாட்களில் சித்தேரியும் நிரம்பி விடும் என விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர். எனினும் வேப்பந்தட்டை தாலுகா பகுதிகளில் பல்வேறு கிராமங்களில் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள் இன்னும் நிரம்பாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News