செய்திகள்
கொரோனா பரிசோதனை

தமிழகத்தில் புதிதாக 1587 பேருக்கு கொரோனா பாதிப்பு

Published On 2021-09-08 14:43 GMT   |   Update On 2021-09-08 14:43 GMT
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 15 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.
சென்னை:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்த தகவல்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழகத்தில் இன்று 160303 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டதில், 1,587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26,27,365 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் 15 பேர், தனியார் மருத்துவமனைகளில் 3 பேர் என மொத்தம் 18 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,073 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1594 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 16,180 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இன்று அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 232 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 179, ஈரோட்டில் 117, செங்கல்பட்டில் 115 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
Tags:    

Similar News