செய்திகள்
கைது

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு- சுமைதூக்கும் தொழிலாளி கைது

Published On 2021-02-20 14:54 GMT   |   Update On 2021-02-20 14:54 GMT
17 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்து பாலியல் தொந்தரவு செய்த சுமைதூக்கும் தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
மதுரை:

மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 36), சுமை தூக்கும் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் 17 வயது சிறுமிக்கு மது வாங்கி கொடுத்துள்ளார். அதை குடித்த சிறுமி சிறிது நேரத்தில் மயங்கி விட்டார். அப்போது செந்தில்குமார் அந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து சிறுமி வீட்டில் உள்ளவர்களிடம் தெரிவித்தார். அவர்கள் உடனே டவுன் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தொழிலாளி செந்தில்குமாரை கைது செய்தனர்.
Tags:    

Similar News