செய்திகள்
கொரோனாவை ஒழிக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் - ராமதாஸ் டுவிட்டர் பதிவு
இந்தியா முழுவதும் 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளார்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
இந்தியா முழுவதும் 180 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பரவல் முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. 181-வது மாவட்டமாக ஏன் உங்கள் மாவட்டம் இருக்க கூடாது? நீங்கள் நினைத்தால் உங்கள் மாவட்டத்திலும் கொரோனாவை ஒழிப்பது சாத்தியம் தான்.
கொரோனா தடுப்பு பணிகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குங்கள். ஊரடங்கை மதித்து வெளியில் வராமல் வீட்டுக்குள் இருங்கள். பாதுகாப்பு விதிகளை தவறாமல் கடைபிடியுங்கள். அடுத்த இரு வாரங்களில் உங்கள் மாவட்டத்தில் இருந்தும் கொரோனாவை விரட்டியடிக்க முடியும். இது உறுதி.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.