செய்திகள்
கோப்புப்படம்

செல்போனில் விளையாடிய போது தம்பியுடன் தகராறு : இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-01-12 02:35 GMT   |   Update On 2021-01-12 02:35 GMT
செல்போனில் விளையாடிய போது தம்பியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கல்பாக்கம்:

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் புது வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் கமலக்கண்ணன். லாரி டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இவர் மகள் காவியா (வயது 18). பிளஸ்-2 படித்துள்ளார். கடந்த 8-ந்தேதி கமலக்கண்ணன் தனது இளைய மகன் யுவராஜுக்கு புதிய செல்போன் வாங்கி வந்தார். அந்த செல்போனில் காவியாவும் அவரது தம்பி யுவராஜும் விளையாடிக்கொண்டிருந்தனர்.

அப்போது காவியாவுக்கும், அவரது தம்பிக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட அவர்களது தாயார் இருவரையும் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் வேதனையடைந்த காவியா பக்கத்து அறைக்கு சென்று தன் துப்பட்டாவால் ஜன்னலில் தூக்கிட்டுள்ளார்.

இதைக்கண்ட அவரது தாயார் மற்றும் அருகில் உள்ளவர்கள் விரைந்து வந்து காவியாவை மீட்டு திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த திருக்கழுக்குன்றம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News