செய்திகள்
விபத்து

உடுமலை அருகே ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலி

Published On 2019-11-18 10:08 GMT   |   Update On 2019-11-18 10:08 GMT
உடுமலை அருகே ரெயில் மோதி அடையாளம் தெரியாத வாலிபர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடுமலை:

திருப்பூர் மாவட்டம் உடுமலை வழியாக பொள்ளாச்சி-பழனி ரெயில்பாதை செல்கிறது. இந்த வழியாக தினமும் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. ரெயில் நிலையத்தையொட்டி எம்.பி.நகர் என்ற பகுதி உள்ளது.

இந்த நிலையில் ரெயில் தண்டவாளத்தில் சம்பவத்தன்று 40 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் ரெயில் மோதி உடல் துண்டாகி இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த பழனி ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்ற தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போலீசார் கூறுகையில், இந்த பகுதி மக்கள் ரெயில்வே தண்டவாளத்தை கடப்பதற்காக சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்கள் அதில் நடந்து செல்லாமல் தண்டவாளத்திலேயே நடந்து செல்கின்றன. இதனால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு சம்பவங்கள் நடக்கிறது என்றனர்.

Tags:    

Similar News