உள்ளூர் செய்திகள்
மலை உச்சியில் தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி பிணம்.

2 ஆயிரம் அடி மலை உச்சியில் தூக்கில் தொங்கிய கள்ளக்காதல் ஜோடி

Published On 2022-01-25 09:30 GMT   |   Update On 2022-01-25 09:30 GMT
திருவண்ணாமலை அருகே 2 ஆயிரம் அடி மலை உச்சியில் கள்ளக்காதல் ஜோடி தூக்கில் தொங்கினர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அடுத்த கலசபாக்கம் அருகில் பருவத மலை உள்ளது. இங்குள்ள மல்லிகார்ஜுன சுவாமி கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் வருகை தருவார்கள். 
 
பருவதமலை 4,560 அடி உயரம் கொண்ட பிரமாண்ட மலையாகும். இங்கும் பவுர்ணமி காலங்களில் பக்தர்கள் கிரிவலம் செல் வார்கள். இந்த நிலையில் பருவத மலையில் 2000 அடி உயரத் தில் ஆடு மேய்க்கச் சென்ற வர்கள் ஒரு ஆணும், ஒரு பெண்ணும் அங்குள்ள மரத்தில் ஒரே சேலையில் தூக்கில் பிணமாக தொங்கு வதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். 

இது பற்றிய தகவல் கிடைத்ததும் கடலாடி இன்ஸ்பெக்டர் முரளிதரன் மற்றும் வனத் துறையினர் உள்பட 20 பேர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தற்கொலை செய்து கொண்ட 2 பேர் உடலையும் மீட்டனர்.  அப்போது கடும் துர்நாற் றம் வீசியது. அவர் கள் தற்கொலை செய்து 10 நாட்கள் வரை ஆகியிருக் கலாம் என்று கூறப்படு கிறது. இருவரது உடலை யும் டோலியில் கட்டி தொழி லாளர்கள் இரவு 1 மணி அளவில் கீழே கொண்டு வந்தனர். 

பின்னர் அவர்களது உடல்கள் பிரேத பரிசோ தனைக்காக திருவண்ணா மலை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்தில் இருந்த 2 பைகளை கைப்பற்றி சோதனை செய்த னர். அதில் இருவரது ஆதார் அட்டைகள் மற்றும் பணம் ஆகியவை இருந்தது. அதன் மூலம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 

இதில் தற்கொலை செய்து கொண்ட இருவரும் சென்னையை அடுத்துள்ள  மாடம் பாக்கம், பள்ளிக்கரணையைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது. மாடம்பாக்கம் அண்ணா நகரைச் சேர்ந்த ராஜசேகர் (வயது43) என்பதும், அவருடன் தற்கொலை செய்து கொண்ட பெண் பள்ளிக்கரணை, நாராயண புரத்தை சேர்ந்த தேவி (26) என்றும் தெரியவந்தது.

ராஜசேகர் அச்சகம் வைத் திருப்பதும் அங்கு இருவருக்கும் இடையே காதல் மலர்ந்ததும் தெரிய வந்துள்ளது. அங்கு தேவி ஊழியராக பணியாற்றி வந்துள்ளார். அப்போதுதான் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதுபற்றி இருவரது குடும் பத்திற்கும் தெரியவந்ததும் அதனை கண்டித்துள்ளனர்.இதைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு இருவரும் மாயமாகி உள்ளனர்.

இதுதொடர்பாக இரு வரின் குடும்பத்தினரும் போலீசில் புகார் செய்துள் ளனர். அதன் பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து அவர்களைத் தேடி வந்தனர்.  இதில் அவர்கள் இருவரும் ஊர் ஊராக சுற்றி விட்டு புனே சென்றதும் தெரிய வந்துள்ளது.  

கடலாடி போலீசார் தற்கொலை செய்துகொண்ட இருவரின் குடும்பத்துக்கும் தகவல் அளித்தனர். அதன் பேரில் இன்று அவர்கள் கடலாடி வருகின்றனர். உற வினர்களிடம் நடத்தப் படும் விசாரணையில் மேலும் பல தகவல்கள் தெரிய வரலாம் என்று கூறப்படுகிறது.
Tags:    

Similar News