செய்திகள்
கோப்புப்படம்

ஊரடங்கு நீட்டிப்பில் எவற்றுக்கெல்லாம் தடை?

Published On 2021-07-10 08:15 GMT   |   Update On 2021-07-10 10:43 GMT
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
சென்னை: 

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வருகிற 12-ந்தேதி காலை 6 மணியுடன் முடிவடையும் நிலையில், மாநிலத்தின் கொரோனா நோய்த்தொற்று நிலையைக் கண்காணித்து தொடர்ந்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலும் வருகிற 12-ந்தேதி முதல் 19-ந்தேதி காலை 6 மணி வரை கீழ்க்கண்ட செயல்பாடுகளுக்கு தடை விதிக்கப்படுகிறது. 

* மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்துக்கு தடை. 

* மத்திய உள்துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களை தவிர சர்வதேச விமான போக்குவரத்துக்கு தடை.



* திரையரங்குகள்,  அனைத்து மதுக்கூடங்கள் மற்றும்  நீச்சல் குளங்களுக்கு தடை.  

* பொதுமக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டங்கள்,  பொழுதுபோக்கு, விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகளுக்கு தடை. 

* பள்ளிகள் மற்றும் கல்லூரிகள்,  உயிரியல் பூங்காக்கள்  திறக்க தடை.

* திருமண நிகழ்வுகளில் 50 நபர்களும்,  இறுதிச்சடங்குகளில் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.


Tags:    

Similar News