செய்திகள்
வேதாரண்யம் அருகே புகையிலை பொருட்களை கொண்டு வந்தவர் கைது
வேதாரண்யம் அருகே புகையிலை பொருட்களை கொண்டு வந்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த கரியாப்பட்டினம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீசார் கரியாப்பட்டினம் மெயின் ரோட்டில் வாகன சோதனை மற்றும் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது திருத்துறைப்பூண்டி பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த ஒருவரை நிறுத்தி பார்த்ததில் அவர் வேதாரண்யம் பகுதி அகஸ்தியம்பள்ளி சேர்ந்த சந்திரகுமார் (வயது 40) என்பதும் மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 570 ஹான்ஸ் புகையிலை பாக்கெட்டுகள் புகையிலை 300 பொட்டலங்களை பறிமுதல் செய்து அவர் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.