செய்திகள்
மின்சாரம் தாக்கி பலி

நெல்லை அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலி

Published On 2021-04-16 10:36 GMT   |   Update On 2021-04-16 10:36 GMT
நெல்லை அருகே மின்சாரம் தாக்கி பால் வியாபாரி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நெல்லை:

நெல்லை அருகே உள்ள தென்கலம் காமராஜர் நகரை சேர்ந்தவர் ஸ்டீபன் (வயது 39). இவர் பால் வியாபாரம் செய்து வந்தார்.

இவரது மோட்டார் சைக்கிளில் உள்ள பேட்டரியில் சார்ஜ் இறங்கி, மோட்டார் சைக்கிளை ஸ்டார்ட் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.

இதனால் ஸ்டீபன் தனது மோட்டார் சைக்கிளில் உள்ள பேட்டரிக்கு, தானே ரீ-சார்ஜ் செய்ய முடிவு செய்தார்.

அதன்படி மின்சார வயரை பேட்டரியில் சொருகி சார்ஜ் கொடுத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்டீபன் மீது மின்சாரம் தாக்கியது. உயிருக்கு போராடிய அவரை உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு ஸ்டீபன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து மானூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News