செய்திகள்
கேரளாவில் புதிதாக மேலும் 19,682 பேருக்கு கொரோனா தொற்று
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 20,510 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 152 பேர் உயிரிழந்துள்ளனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 19,682 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 20,510 பேர் குணமடைந்துள்ள நிலையில், 152 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 43,94,476 பேர் குணமடைந்துள்ள நிலையில் 24,191 பேர் உயிரிழந்துள்ளனர். 1,60,046 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கடந்த 24 மணி நேரத்தில் 1,21,945 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.