செய்திகள்
பிரதமர் மோடி

சாதனை விருது பெறும் குழந்தைகளுடன் மோடி இன்று கலந்துரையாடுகிறார்

Published On 2021-01-24 22:42 GMT   |   Update On 2021-01-24 22:42 GMT
பாலசக்தி புராஸ்கர் சாதனை விருது பெறுகிற குழந்தைகளுடன் பிரதமர் மோடி, இன்று (25-ந் தேதி) காணொலி காட்சி வழியாக கலந்துரையாடுகிறார்.
புதுடெல்லி:

நாடு முழுவதும் கண்டுபிடிப்பு, விளையாட்டு, கலை, கலாசாரம், சமூக சேவை, கல்வி உள்ளிட்ட துறைகளில் சிறப்பான சாதனை படைக்கிற குழந்தைகளுக்கு பிரதம மந்திரி ராஷ்டிரிய பாலபுராஸ்கரின் கீழ், பாலசக்தி புராஸ்கர் விருது வழங்கி மத்திய அரசு சிறப்பிக்கிறது.

இந்த ஆண்டு இவ்விருதுக்கு 32 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் மரக்கன்று நடுவதில் சாதனை படைத்து வருகிற 7 வயது சிறுவன் பிரசித்தி சிங், இந்த விருது பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விருது பெறுகிற குழந்தைகளுடன் பிரதமர் மோடி, இன்று (25-ந் தேதி) காணொலி காட்சி வழியாக கலந்துரையாடுகிறார். அப்போது மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி உடனிருப்பார்.
Tags:    

Similar News