செய்திகள்

பாஜகவுடன் ஸ்டாலின் பேசிவருவது உண்மைதான் - தமிழிசை சவுந்தரராஜன்

Published On 2019-05-14 08:31 GMT   |   Update On 2019-05-14 09:00 GMT
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பா.ஜ.க.வுடன் பேசிவருவது உண்மைதான் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி:

தூத்துக்குடியில் தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தி, சந்திரசேகர் ராவிடம் பேசியதை போல் மறுபுறம் பிரதமர் மோடியுடனும் பேசி வருகிறார்.

நாங்கள் வெற்றி பெறுவோம் என்பதை அறிந்துள்ளதாலும், பதவி, பசி காரணத்தாலும் பா.ஜ.க.வுடன் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். 



ஸ்டாலின் தான் குழப்பத்தில் உள்ளார். பா.ஜ.க. கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. தேர்தல் நேரத்தில் சோதனை நடத்தப்படுவது வாடிக்கைதான் என தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க.விடம் 5 கேபினட் அமைச்சர் பதவிகளை கேட்டு தி.மு.க. பேசி வருகிறது என அமைச்சர் ஜெயக்குமார் நேற்று பேசியது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News