செய்திகள்
வாக்களித்துவிட்டு பணிகளை தொடர்ந்த தொழிலாளர்கள்
வடகாடு அருகே கீழாத்தூரில் தெற்கு பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கூலி தொழிலாளர்களே அதிக அளவில் வாக்களித்தனர்.
வடகாடு:
வடகாடு அருகே கீழாத்தூரில் தெற்கு பகுதியில் உள்ள அரசு நடுநிலை பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் கூலி தொழிலாளர்களே அதிக அளவில் வாக்களித்தனர். தற்போது கடலை செடிகளை அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் இப்பகுதியில் உள்ள விவசாய கூலி தொழிலாளிகள் காலையில் வாக்களித்துவிட்டு மீட்டு தங்கள் தொழிலை மேற்கொண்டனர்.