செய்திகள்
பேரணாம்பட்டு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
பேரணாம்பட்டு அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு அருகே உள்ள பொகளூர் கீழ்ஆலாங்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் ஹரி (வயது 33), தச்சு தொழிலாளி. இவருக்கு திருமணமாகி நதியா என்ற மனைவியும், ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஹரிக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததுள்ளார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி வீட்டில் யாருமில்லாதபோது ஹரி தூக்குப்போட்டு கொண்டார். அங்கு வந்த உறவினர்கள் அவரை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து மேல்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.