செய்திகள்
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேர் கைது
கீழ்வேளூர் பகுதியில் சாராயம் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிக்கல்:
கீழ்வேளூர் பகுதியில் காரைக்காலில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது குற்றம்பொருத்தானிருப்பு சின்னபாலம் அருகில் சாராயம் விற்ற அதே பகுதியை சேர்ந்த சரவணன்(வயது45), ஆழியூர் பிரிவு சாலை பிள்ளையார் கோவில் அருகே சாராயம் விற்ற நாகை வெளிப்பாளையம் பகுதியை சேர்ந்த ரவிக்குமார்(55) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து தலா 110 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.