செய்திகள்
கோப்புபடம்.

மழை காலங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்-அதிகாரி அறிவுறுத்தல்

Published On 2021-09-05 09:30 GMT   |   Update On 2021-09-05 09:30 GMT
மின்சாதனங்களில் மின்அதிர்வு ஏற்பட்டால் மெயின் சுவிட்ச் ஆப் செய்துவிட வேண்டும்.
திருப்பூர்:

மழைக்காலத்தில் மின்சாரம் தாக்குதலில் இருந்து தப்பிப்பது எப்படி? என்பது குறித்து கோவை மண்டல மின்வாரிய தலைமை பொறியாளர் டேவிட் ஜெபசிங் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர்  வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மழைக்காலத்தில் இடி, மின்னலின் போது அருகே உள்ள கட்டிடம் அல்லது வாகனங்களுக்குள் சென்றுவிட வேண்டும். குடிசை வீடு, மரங்களின் கீழ் நிற்கக்கூடாது. 

திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு அருகேயும், சாய்ந்த மின்கம்பங்களுக்கு அருகேயும் நிற்பதை தவிர்க்க வேண்டும். டி.வி., கேபிள் இணைப்புகளை துண்டிக்க வேண்டும். டி.வி., மிக்சி, கிரைண்டர், கம்ப்யூட்டர் உள்ளிட்ட மின்சாதனங்கள் பயன்படுத்துவதையும் தவிர்க்க வேண்டும்.
 
மின்தடை ஏற்பட்டால் மின்வாரிய ஊழியரிடம் தெரிவிக்க வேண்டும். மழை பெய்யும் போது ‘டிரான்ஸ்பார்மர்’, மின்கம்பம், ஸ்டே கம்பி அருகே செல்லக்கூடாது.மின்சாதனங்களில் மின் அதிர்வு ஏற்பட்டால் மெயின் சுவிட்ச் ஆப் செய்துவிட வேண்டும். 

தண்ணீர் தேங்கியுள்ள இடத்தில் நிற்கவோ, நடக்கவோ கூடாது. அறுந்து கிடக்கும் மின்கம்பிகள் அருகே செல்லக்கூடாது. ஈரமான கையுடன், சுவிட்ச்சை தொடக்கூடாது.’ஸ்டே’கம்பி மற்றும் மின்கம்பத்தில் கயிறு கட்டி, துணி உலர்த்தக்கூடாது. மழைகாலங்களில், மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்து மின் விபத்து நடக்காமல் தடுக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 
Tags:    

Similar News