செய்திகள்
கர்நாடக பிரிமீயர் லீக்

கர்நாடக பிரிமீயர் லீக் சூதாட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் கைது

Published On 2019-11-10 02:46 GMT   |   Update On 2019-11-10 08:59 GMT
கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் இன்று கைது செய்யப்பட்டார்.
பெங்களுர்:

கர்நாடகா கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் கர்நாடக பிரிமீயர் லீக் என்ற பெயரில் 20 ஓவர் கிரிக்கெட் தொடர் கடந்த 2009-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. 

இதுவரை 8 சீசன்களாக நடைபெற்றுள்ள இந்த கிரிக்கெட் தொடரில் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியை 8 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹூப்ளி டைகர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
 
இதில் பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேபடன் சிஎம் கௌதம் 37 பந்துகளில் வெறும் 29 ரன்கள் மட்டுமே எடுத்து மிகவும் மந்தமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். கேப்டனின் மந்தமான ஆட்டமே தோல்விக்கு முக்கிய காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது. 

இறுதிப் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாக எழுந்த புகாரையடுத்து பெங்களுர் குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். 
இதையடுத்து, கர்நாடாக பிரிமீயர் லீக் தொடரில் மேட்ச் பிக்சிங் எனப்படும் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக பல்லாரி டஸ்கர்ஸ் அணியின் கேப்டன் சிஎம் கௌதம் மற்றும் அபர் காசி ஆகிய இரு வீரர்களை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், கர்நாடக பிரிமீயர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தின் போது சூதாட்டத்தில் ஈடுபட்டதாக தொடரப்பட்ட வழக்கில் சர்வதேச தரகர் சயாம் இன்று கைது செய்யப்பட்டார்.
Tags:    

Similar News