செய்திகள்
கோப்புபடம்

ஆண்டிமடம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி

Published On 2020-10-16 13:49 GMT   |   Update On 2020-10-16 13:49 GMT
ஆண்டிமடம் அருகே மோட்டார்சைக்கிள் இருந்து தவறி விழுந்து பெண் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆண்டிமடம்:

கடலூர் மாவட்டம், கணபதிகுறிச்சி கிராமம் மெயின் சாலை பகுதியை சேர்ந்தவர் பரமசிவம். இவர், சம்பவத்தன்று மனைவி மணியுடன் (வயது 40) மோட்டார் சைக்கிளில் அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம்-காடுவெட்டி சாலையில் தர்மசமுத்திரம் கிராமம் அருகே சென்று கொண்டிருந்தார். 

அப்போது நாய் ஒன்று குறுக்கே வந்ததால், திடீரென பிரேக் பிடித்ததில் நிலைதடுமாறி இருவரும் கீழே விழுந்தனர். இதில் மணியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை பெற்ற அவர், அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நேற்று முன்தினம் மணி உயிரிழந்தார். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News