செய்திகள்
விபத்து பலி

வெண்ணந்தூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலி

Published On 2021-07-16 10:00 GMT   |   Update On 2021-07-16 10:00 GMT
வெண்ணந்தூர் அருகே வாகனம் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வெண்ணந்தூர்:

வெண்ணந்தூர் அடுத்த மேற்கு வலசு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி மகன் பழனிசாமி (வயது 32). கூலித்தொழிலாளி. இவர் நேற்று மாலை வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்கும்போது நாமக்கல்லில் இருந்து சேலம் நோக்கி சென்ற வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட பலத்த காயம் அடைந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற வெண்ணந்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோமதி மற்றும் போலீசார் பழனிசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து இறந்தவரின் தாய் கந்தாயி வெண்ணந்தூர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தின் டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News