வழிபாடு
சிவராத்திரி நைவேத்தியங்கள்

சிவராத்திரி நைவேத்தியங்கள்

Published On 2022-03-01 08:39 GMT   |   Update On 2022-03-01 08:39 GMT
மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும். நான்கு ஜாமப் பூஜைக்கும் செய்யப்படும் நைவேத்தியங்கள் பற்றி அறிந்து கொள்ளலாம்.
மகா சிவராத்திரி அன்று இரவு கோவில்களில் நான்கு ஜாமப் பூஜைகள் நடைபெறும். முதல் ஜாமத்தில் பஞ்ச கவ்விய அபிஷேகமும், பொங்கல் நிவேதனமும் செய்து வில்வத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

இரண்டாம் ஜாமத்தில் பஞ்சாமிர்த அபிஷேகமும், பாயாசம் நிவேதனமும் செய்து தாமரை மலரால் அர்ச்சிக்க வேண்டும்.

மூன்றாம் ஜாமத்தில் தேன் அபிஷேகமும், நெய்யும் மாவும் கலந்து நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நான்காம் ஜாமத்தில் கரும்புச்சாறு அபிஷேகமும், வெண் பொங்கல் நிவேதனமும் செய்து நந்தியாவட்டை மலர்களால் அர்ச்சிக்க வேண்டும்.
Tags:    

Similar News