செய்திகள்
திருப்பூர் நல்லூர் கோவிலில் உண்டியலை உடைத்து கொள்ளை
நேற்றிரவு வழிபாடுகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் நல்லூர் ஜெய்நகர் (கிழக்கு) பகுதியில் வலம்புரி ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 11-ம் ஆண்டு விழா நாளை நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வந்தது.
இந்தநிலையில் நேற்றிரவு வழிபாடுகள் முடிந்ததும் பணியாளர்கள் கோவிலை பூட்டி விட்டு சென்றனர். இன்று காலை சென்று பார்த்த போது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்கள் யாரென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.