செய்திகள்
கந்தம்பாளையம் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலி
கந்தம்பாளையம் அருகே பாம்பு கடித்து தொழிலாளி பலியான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உள்ள குன்னமலை ஊராட்சிக்கு உட்பட்ட சமத்துவபுரத்தில் வசித்து வந்தவர் குமார் (வயது 52), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 19-ந் தேதி இரவு சமத்துவபுரம் அருகே உள்ள பகுதிக்கு இயற்கை உபாதையை கழிக்க சென்றார். அங்கு அவரை பாம்பு கடித்து விட்டதாக வீட்டிற்கு வந்து அவரது மனைவியிடம் கூறி உள்ளார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் உதவியுடன் நல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு குமார் கொண்டு வரப்பட்டார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அவரை திருச்செங்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். கொண்டு செல்லும் வழியிலேயே குமார் இறந்து விட்டார். இதுகுறித்து நல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.