செய்திகள்
கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூதாடிய 7 பேர் கைது

Published On 2019-09-20 13:23 GMT   |   Update On 2019-09-20 13:23 GMT
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சூதாடிய 7 பேரை கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர், கெலமங்கலம் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் பச்சமுத்து, முருகன் மற்றும் போலீசார் பர்கூர் பூமாலை நகர், கெலமங்கலம் தொட்டகானப்பள்ளி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அந்த பகுதியில் சிலர் பணம் வைத்து சூதாடுவதை கண்ட போலீசார் அங்கு இருந்தவர்களை சுற்றிவளைத்து பிடித்தனர். அப்போது, போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த முருகேசன்(40), சக்கிலிநத்தம் பகுதியை சேர்ந்த பார்த்தீபன்(33), ஜெகதாப் பகுதியை சேர்ந்த சின்னசாமி(27), தொட்டகானப்பள்ளியை சேர்ந்த கோவிந்தராஜ்(42), மணி(25), ஜெயகுமார்(39), சுப்பிரமணி(52) ஆகிய 7 பேரும் பணம் வைத்து சூதாடியதும் தெரியவந்தது.

இதனையடுத்த போலீசார் வழக்குபதிவு செய்து 7 பேரையும் கைது செய்தனர். 
Tags:    

Similar News