செய்திகள்
நடிகர் சூர்யா

தஞ்சை மாவட்டத்திற்கு வந்தால் சூர்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு - வன்னியர் சங்க மாநில துணை தலைவர் அறிவிப்பு

Published On 2021-11-24 14:58 GMT   |   Update On 2021-11-24 14:58 GMT
வெளிப்படையாக அறிவித்து விட்டு தஞ்சை மாவட்டத்திற்கு வந்தால் நடிகர் சூர்யாவுக்கு ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று வன்னியர் சங்க மாநில துணை தலைவர் கூறினார்.
தஞ்சாவூர்:

ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ம.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஜெய்பீம் திரைப்பட குழுவினரை கைது செய்யக்கோரி கடந்த 2-ந் தேதி முதல் தொடர் போராட்டம் நடந்து வருகிறது. அமைதியாக மக்கள் வாழ்ந்து வரும் தமிழகத்தில் வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைப்பதை முதல்-அமைச்சர் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லையெனில் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி தஞ்சை மாவட்டத்தில் உள்ள 100-க்கும் மேற்பட்ட வன்னியர் வாழும் கிராமங்களில் ஆண்களையும், பெண்களையும், இளைஞர்களையும் திரட்டி அக்னி குண்டத்தில் நடிகர் சூரியாவின் உருவ படம் எரிக்கப்படும்.

அந்த போராட்டத்தை தலைமை தாங்கி நடத்துபவர்களுக்கு டாக்டர் ராமதாஸ், டாக்டர் அன்புமணி, அக்னி கும்பம் படம் பொறித்த அரை பவுன் டாலர் வழங்கப்படும்.

அதேபோல் தஞ்சை மாவட்டத்திற்கு நடிகர் சூர்யா எப்போது வேண்டுமானாலும் வெளிப்படையாக அறிவித்துவிட்டு வரவேண்டும். அப்படி வந்தால் அவருக்கு ரூ.10 லட்சம் வரைவோலை பரிசு வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News