செய்திகள்
நொய்யல் பகுதியில் உள்ள ஆத்தூர் அருகே செல்லரபாளையம் பகுதியில் கொரோனா தொற்று குறித்த பரிசோதனை முகாம் நடைபெற்றது.
நொய்யல்:
நொய்யல் பகுதியில் உள்ள ஆத்தூர் அருகே செல்லரபாளையம் பகுதியில் கொரோனா தொற்று குறித்த பரிசோதனை முகாம் நடைபெற்றது. முகாமில் ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் டாக்டர் சுதமதி தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, பொதுமக்களுக்கு சளி மாதிரி எடுத்து கொரோனா பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கபசுரகுடிநீர், மருந்து, மாத்திரைகள் வழங்கப்பட்டன.