ஆன்மிகம்
அய்யா வைகுண்டர்

செம்பொன்கரை பொன்னாம்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நாளை தொடங்குகிறது

Published On 2021-10-07 08:53 GMT   |   Update On 2021-10-07 08:53 GMT
மேலகிருஷ்ணன்புதூர் அருகே செம்பொன்கரை பொன்னாம்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது.
மேலகிருஷ்ணன்புதூர் அருகே செம்பொன்கரை பொன்னாம்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) தொடங்கி 17-ந் தேதி வரை நடக்கிறது. விழா நாட்களில் மாலை 4.30 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 5 மணிக்கு திருஏடு வாசிப்பு, இரவு 8 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை, 8.30 மணிக்கு அன்னதானம் போன்றவை நடக்கிறது.

10-ந் தேதி இரவு 8 மணிக்கு அய்யா குதிரை வாகனத்தில் பதியை சுற்றி வலம் வருதல், 15-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாண திருஏடு வாசிப்பு, இரவு 8.30 மணிக்கு அய்யா இந்திர வாகனத்தில் பதியை சுற்றி வலம் வருதல் ஆகியவை நடைபெறும். விழாவின் இறுதி நாளான 17-ந் தேதி அய்யாவுக்கு பட்டாபிஷேக விழா நடக்கிறது. அன்று மதியம் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, 1 மணிக்கு அன்ன பால்தர்மம், இரவு 7.30 மணிக்கு அய்யா கருட வாகனத்தில் பதியை சுற்றி வலம் வருதல் போன்றவை நடைபெறும்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலைவர் ராஜன் அன்ட் கோ தங்கப்பன் மற்றும் நிர்வாக குழுவினர் செய்துள்ளனர்.
Tags:    

Similar News