உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சாத்தான்குளம் பகுதியில் நாளை மறுநாள் மின் தடை

Published On 2022-01-27 09:38 GMT   |   Update On 2022-01-27 09:38 GMT
சாத்தான்குளம், நாசரேத், பெரியதாழை உபமின்நிலையங்களில் நாளை மறுநாள் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே 29-ந் தேதி பிற்பகல் 1 மணி முதல் 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என திருச்செந்தூர் மின் விநியோக பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
உடன்குடி:

திருச்செந்தூர் மின் விநியோக பொறியாளர் விஜய சங்கரபாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சாத்தான்குளம் உபமின் நிலையத்தை சார்ந்த சாத்தான்குளம், முதலூர், கருங்கடல், வெங்கடேசபுரம் பகுதியிலும், நாசரேத் உபமின் நிலையத்தை சார்ந்த நாசரேத், கச்சனாவிளை, நெய்விளை, வெள்ளமடம், ஏழுவரைமுக்கி, தோழப்பனை பகுதியிலும்,

செம்மறிக்குளம் உபமின்நிலையத்தை சார்ந்த மெஞ்ஞானபுரம், அனைத்தலை, ராமசாமிபுரம், லெட்சுமிபுரம், வாகைவிளை, மானாடு, செட்டிவிளை பகுதிகளிலும், நடுவக்குறிச்சி உபமின் நிலையத்தைச் சார்ந்த நடுவக்குறிச்சி, தட்டார்மடம், புத்தன்தருவை, பூச்சிக்காடு, படுக்கப்பத்து, பெரியதாழை, உசரத்துகுடியிருப்பு, காந்திநகர், கொம்டிக்கோட்டை, சுண்டன்கோட்டை, உதிரமாடன்குடியிருப்பு, பிச்சிவிளை, அழகப்பபுரம் பகுதியிலும்,

பழனியப்பபுரம் உப மின்நிலையத்தை சார்ந்த மீரான்குளம், பழனியப்பபுரம், கட்டாரிமங்கலம், அம்பலசேரி, அறிவான்மொழி பகுதிகளில் நாளை மறுநாள் (29-ந்தேதி) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

எனவே அன்றைய தினம் பிற்பகல் 1மணி முதல் மாலை 5மணி வரை மின் விநியோகம் இருக்காது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News