செய்திகள்
கைது

வண்ணாரப்பேட்டையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேர் கைது

Published On 2019-10-21 11:14 GMT   |   Update On 2019-10-21 11:14 GMT
சென்னை வண்ணாரப்பேட்டையில் கத்திமுனையில் வாலிபரிடம் செல்போன் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
ராயபுரம்:

வண்ணாரப்பேட்டை மூலக்கொத்தளம் பகுதியில் நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ண மூர்த்தி என்பவரை 2 வாலிபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த விலை உயர்ந்த செல்போனை பறித்துச் சென்று விட்டனர்.

இதுகுறித்து வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்ட வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்த தினேஷ், நரேஷ் ஆகிய இருவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News