செய்திகள்
விபத்து பலி

பள்ளிப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலி

Published On 2021-09-28 15:24 GMT   |   Update On 2021-09-28 15:24 GMT
பள்ளிப்பட்டில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பள்ளிப்பட்டு:

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அத்திமாஞ்சேரி பேட்டை காலனியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 70). இவர் நேற்று காலை பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்று மேம்பாலத்தில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.

அப்போது மிக வேகமாக அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் இவர் மீது மோதி நிலைதடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் முனுசாமி இடது கால் மற்றும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த பொம்மராஜூப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த சரவணன் (25) என்பவரும் காயமடைந்தார்.

இதையடுத்து, இவர்கள் இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, பள்ளிப்பட்டு அருகே கோனேட்டம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முனுசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்த பிறகு அவரை திருத்தணி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு டாக்டர்கள் அவரை பரிசோதித்த பின்னர், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து பள்ளிப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இறந்த முனுசாமிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
Tags:    

Similar News