செய்திகள்
மாம்பாக்கம் பகுதிகளில் நாளை மறுநாள் மின்நிறுத்தம்
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் துணைமின்நிலையத்தில் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டம் மாம்பாக்கம் துணைமின்நிலையத்தில் வருகிற 28-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடக்கிறது. எனவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மாம்பாக்கம், குப்பிடிசாத்தம், மருதம், இருங்கூர், பென்னகர், வாழப்பந்தல், வேம்பி, அத்தியானம், ஆருர், வடக்குமேடு தட்டச்சேரி ஆகிய பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படும் என ஆற்காடு மின்வினியோக செயற்பொறியாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.