செய்திகள்
விபத்து பலி

ஓசூர் அருகே நள்ளிரவில் கார் டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்தது- 2 வாலிபர்கள் பலி

Published On 2021-01-17 07:31 GMT   |   Update On 2021-01-17 07:31 GMT
ஓசூர் அருகே நள்ளிரவில் கார் டயர் வெடித்து ரோட்டில் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் பகுதியில் உள்ள தர்காவில் வருகிற 24-ந் தேதி உருஸ் விழா நடக்கிறது.

இதையொட்டி அங்கு பராமரிப்பு பணிகளை செய்வதற்காக பெங்களூரு பொம்மஹள்ளி அருகே உள்ள மங்காபாலையா பகுதியை சேர்ந்த ஜிலான் (வயது 24), அவரது நண்பர் அர்பர் பாஷா (24), மற்றும் அவரது தம்பி கிஷான்(14) உள்பட 6 பேர் நேற்று இரவு காரில் புறப்பட்டனர்.

நள்ளிரவு 12 மணியளவில் கார், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர்- கெலமங்கலம் சாலையில் அக்கொண்டப்பள்ளி என்ற இடத்தில் வந்த போது திடீரென காரின் முன்பக்க டயர் வெடித்தது. இதில் கார், ரோட்டில் உருண்டப்படியே கவிழ்ந்தது.

இதில் காரை ஓட்டிய ஜிலான், மற்றும் அர்பர் பாஷா ஆகியோர் காரின் இடிபாட்டில் சிக்கி உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் இந்த விபத்தில் கிஷான் படுகாயம் அடைந்தார். மற்ற 3 பேரும் லேசான காயத்துடன் தப்பினர்.

இந்த விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் ஓசூர் மத்தகிரி போலீசார் விரைந்து வந்தனர். பலியான ஜிலான், அர்பர்ஷா உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் காயம் அடைந்த கிஷான் தருமபுரி அரசு ஆஸ்பத்திரியிலும், மற்ற 3 பேர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியிலும் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ரோட்டில் கார் கவிழ்ந்து 2 வாலிபர்கள் பலியான சம்பவம் கெலமங்கலம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News