ஆன்மிகம்
திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவசத்தி்ல் காட்சி தருகிறார்
ஆங்கில புத்தாண்டையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் இன்று வெள்ளிக்கவச அலங்காரத்தில் காட்சி கொடுக்கிறார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் கோவிலின் கருவறையில் முருகப்பெருமான் அமர்ந்த கோலத்தில் சாந்தமாக காட்சி தருகிறார். திருமணக்கோலத்திலும் அருள்பாலிக்கிறார்.
இத்தகைய கண்கொள்ளாக் காட்சியானது முருகப்பெருமான் குடிகொண்டுள்ள மற்ற தலங்களில ்காணக்கிடைக்காத ஒன்றாகும். மேலும் சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள், கற்பக விநாயகர், துர்க்கை அம்மாள் என்று ஒரே கருவறையில் தனித்தனியாக சன்னதிகள் அமைந்து இருப்பதும் சிறப்பாகும். இத்தகைய பல்வேறு சிறப்புகள் கொண்ட இந்த தலத்தில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டு தினத்தில் முருகப்பெருமானுக்கு தங்கக்கவசமும், ஆங்கில புத்தாண்டு தினத்தில் வெள்ளிக்கவசமும் சாத்துப்படி செய்யப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.
2021-ம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு இன்று (வெள்ளிக்கிழமை) பிறக்கிறது. இதனையொட்டி திருப்பரங்குன்றம் முருகப்பெருமானுக்கு வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது இதேபோல கருவறையில் சத்தியகிரீஸ்வரர், கற்பக விநாயகர், பவளக்கனிவாய் பெருமாள், துர்க்கை அம்பாளுக்கும் வெள்ளிக்கவச அலங்காரம் செய்யப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் துணை கமிஷனர் (பொறுப்பு) ராமசாமி மற்றும் ஸ்தானிக பட்டர்கள், கோவில் ஊழியர்கள் செய்து வருகிறார்கள்.