ஆன்மிகம்
கோவிந்தராஜ சாமி கோவிலில் தெப்போற்சவம் நடந்தபோது எடுத்த படம்.

திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் தெப்போற்சவம்

Published On 2021-02-24 08:33 GMT   |   Update On 2021-02-24 08:33 GMT
திருப்பதி கோவிந்தராஜ சாமி கோவிலில் தெப்போற்சவம் நடந்தது. பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு தெப்பம் தங்கள் அருகில் வந்தபோது அவர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினர்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தானத்துக்கு சொந்தமான கோவிந்தராஜ சாமி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் நடைபெற்று வருகிறது. மாசி பவுர்ணமியையொட்டி கடந்த 20-ந் தேதி தெப்போற்சவம் தொடங்கியது.

அதன் ஒரு பகுதியாக நேற்றுமுன்தினம் மாலை கோவிந்தராஜ சாமி கோவிலில் வீற்றிருக்கும் கல்யாண வெங்கடேஸ்வரர், தனது நாச்சியார்களான ஸ்ரீதேவி, பூதேவியுடன் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி 5 முறை வலம் வந்து அருள் பாலித்தார்.

திரளான பக்தர்கள் படித்துறையில் அமர்ந்து தரிசனம் செய்தனர். தெப்பம் தங்கள் அருகில் வந்தபோது அவர்கள் கற்பூர ஆரத்தி காண்பித்து வணங்கினர். தெப்பலில் நாதஸ்வர இசை, வேதபாராயணம் நடந்தது.

அதேபோன்று தெப்போற்சவத்தையொட்டி தி்ருக்குளம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அங்கு ஆடல், பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும், ஆன்மிக நிகழ்ச்சிகளும் நடந்தது.
Tags:    

Similar News