செய்திகள்
விபத்து

செந்துறை அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலி

Published On 2020-01-10 11:12 GMT   |   Update On 2020-01-10 11:12 GMT
செந்துறை அருகே சாலை விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செந்துறை:

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள முளையூர் கிராமத்தைச் சேர்ந்த மாணிக்கம் மனைவி காசியம்மாள் (வயது 80). சாலையில் நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியே வந்தகார் அவர் மீது மோதியது. இதில்படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தளவாய் போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு காரணமான காரை ஓட்டி வந்த வசந்தகுமார் என்பவரை தேடிவருகின்றனர்.

Tags:    

Similar News