வழிபாடு
சாமிதோப்பு அய்யாவைகுண்ட சுவாமி தலைமைப்பதியின் முன்பு இன்று முத்துக் குடை ஊர்வலம் துவங்கிய போது எடுத்த படம்.

முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்களின் முத்துக்குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது

Published On 2022-04-08 07:02 GMT   |   Update On 2022-04-08 07:02 GMT
சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் இருந்து முட்டப்பதிக்கு அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக்குடை ஊர்வலம் இன்று (வெள்ளிக்கிழமை) காலை தலைமைப்பதியில் முன்பு இருந்து தொடங்கியது.
ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் கடைசி வெள்ளிக்கிழமை சாமி தோப்பு தலைமைப் பதியிலிருந்து முட்டப்பதிக்கு அய்யா வழி பக்தர்கள் கலந்து கொள்ளும் முத்துக் குடை ஊர்வலம் நடை பெறுவது வழக்கம்.

அந்த வகையில் இந்த வருடம் முத்து குடை ஊர்வலம் இன்று காலை தொடங்கியது. முத்துக்குடை ஊர்வலத்தை முன்னிட்டு சாமிதோப்பு அய்யா வைகுண்ட சுவாமி தலைமைப்பதியில் அதி காலை 4 மணிக்கு முத்திரி பதமிடுதலும், தொடர்ந்து அய்யாவுக்கு சிறப்பு பணிவிடையும், காலை 6 மணிக்கு தலைமைப்பதியில் முன்பிருந்து முத்துக்குடை களும், மேளதாளங்களும் முன்செல்ல தொடர்ந்து காவிக்கொடி பிடித்த அய்யா வழி பக்தர்கள் அணிவகுத்து செல்ல முத்துக்குடை ஊர்வலம் புறப்பட்டது. இந்த ஊர்வலத்தை பால ஜனாதிபதி தொடங்கி வைத்தார்.

டாக்டர் வைகுந்த் ஊர்வலத்திற்கு தலைமை வகித்தார். பால.லோகாதிபதி, பையன் கிருஷ்ணராஜ், ஜனா.யுகேந்த், ஆகியோர் முன்னிலை வகிக்தனர். ஊர்வலம் சாமிதோப்பு தலைமைப்பதி முன்பு இருந்து புறப்பட்டு பெரிய ரத வீதியை சுற்றி வந்து கரும்பாட்டூர், ஈச்சன்விளை, அகஸ்தீஸ்வரம், வழியாக முட்டப்பதி சென்றடைந்தது. ஊர்வலம் போகும் பகுதி களிலுள்ள நிழல்தாங்கல் களில் ஊர்வலத்திற்கு வர வேற்பும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

நண்பகல் ஊர்வலம் முட்டப்பதியை சென்ற டைந்தது. அங்கு அய்யா வைகுண்ட சாமிக்கு சிறப்பு பணிவிடையும், உச்சி படிப்பும் தொடர்ந்து அய்யாவழி பக்தர்களுக்கு அன்னதானமும் நடை பெற்றது. ஊர்வலம் மீண்டும் மாலை 4- மணிக்கு முட்டப்பதிலிருந்து புறப்பட்டு கொட்டாரம், அச்சங்குளம், பொத்தையடி, அரசம்பதி வழியாக சாமிதோப்பு தலைமைப் பதியை வந்தடை கிறது. இந்த ஊர்வலத்தில் திரளான அய்யாவழி பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.
Tags:    

Similar News