செய்திகள்
கோப்புப்படம்

தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1,192 பேருக்கு கொரோனா

Published On 2021-10-18 14:11 GMT   |   Update On 2021-10-18 14:11 GMT
தமிழகத்தில் இன்று கொரோனா தொற்றிற்கு 13 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 1,423 பேர் குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை இன்றைய கொரோனா பாதிப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இன்று புதிதாக மேலும் 1192 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,423 பேர் குணமடைந்துள்ளனர். 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 26,88,284 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 150 பேரும், கோவையில் 130 பேரும், ஈரோட்டில் 88 பேரும், செங்கல்பட்டில் 87 பேரும், தஞ்சாவூரில் 72 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது 14,570 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Tags:    

Similar News