உள்ளூர் செய்திகள்
விபத்து

கல்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் வாலிபர் பலி

Published On 2022-05-05 08:45 GMT   |   Update On 2022-05-05 08:45 GMT
கல்பாக்கம் அருகே கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் வாலிபர் சம்பவ இடத்திலேயே பலியானார்.
மாமல்லபுரம்:

சென்னை, திருவல்லிக்கேணியை சேர்ந்தவர் சக்திவேல்(வயது45). இவர் நண்பர் பழனிவேலுடன் தொழில் சம்பந்தமாக மோட்டார் சைக்கிளில் பாண்டிச்சேரிக்கு சென்றார். கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் கொடப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலை வளைவில் சென்ற போது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சக்திவேல் சம்பவ இடத்திலேயே பலியானார். உடன் சென்ற நண்பர் பழனிவேல் பலத்த காயம் அடைந்து செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News