செய்திகள்
கைது

மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேர் கைது

Published On 2021-01-12 14:32 GMT   |   Update On 2021-01-12 14:32 GMT
மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:

மதுரை ஜெய்ஹிந்த்புரம், எம்.கே.புரத்தை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 42). இவர் கீரைத்துறை ரெயில்வே நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர் அவர்கள் கத்தியை காட்டி மிரட்டி பூமிநாதனை தாக்கி அவரிடமிருந்து பணத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர். இது குறித்து அவர் கீரைத்துறை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலஅனுப்பானடியை சேர்ந்த பிரபல ரவுடி வேல்முருகன், சிந்தாமணியை சேர்ந்த தினேஷ்வரன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News