உள்ளூர் செய்திகள்
தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவபத்மநாதன் பொதுமக்களுக்கு தென்னங்கன்றுகள் வழங்கிய காட்சி.

ஆலங்குளம் அருகே தி.மு.க. தொண்டரணி சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவி

Published On 2022-05-05 10:22 GMT   |   Update On 2022-05-05 10:22 GMT
ஆலங்குளம் அருகே தி.மு.க. தொண்டரணி சார்பில் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் வழங்கினார்.
ஆலங்குளம்:

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. தொண்டரணி சார்பில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 69-வது பிறந்த தின பொதுக்கூட்டம் மற்றும் 1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கழுநீர்குளத்தில் நடைபெற்றது. 

கழுநீர்குளம் ஊராட்சி மன்றத் தலைவரும், மாவட்ட தொண்டரணி அமைப்பாளருமான கை.முருகன் வரவேற்றார். பொன்மோகன்ராஜ், தினேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் சிவன்பாண்டி, பொறியாளர் அணி துணை அமைப்பாளர் வேல் ஆகியோர் தொகுப்புரை ஆற்றினர். மாநில பேச்சாளர்கள் ஆரணி மாலா, உடன்குடி தனபால் ஆகியோர் பேசினர்.

தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர்  சிவபத்மநாதன் பங்கேற்று, கல்லூத்து, அத்தியூத்து, முத்துகிருஷ்ணபேரி அங்கன்வாடிகளுக்கு இருக்கைகள், கலிங்கப்பட்டி ரேசன் கடைக்கு மேஜை, தென்னங்கன்றுகள் மற்றும்1,500 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்வி போஸ், யூனியன் சேர்மன்கள் கீழப்பாவூர் காவேரி சீனித்துரை, ஆலங்குளம் திவ்யா மணிகண்டன், ஒன்றிய செயலாளர்கள் சீனித்துரை, தொழிலதிபர்கள் சண்முகவேலு,  மணிகண்டன்,  ஏ.பி.அருள், கீழப்பாவூர் பேரூர் பொருளாளர் பொன்செல்வன், மாவட்ட இளைஞரணி சரவணன், ஒன்றிய அவைத்தலைவர் தளபதி முருகேசன், ஒன்றிய கவுன்சிலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

இதற்கான ஏற்பாடுகளை கை. முருகன்செய்திருந்தார்.
Tags:    

Similar News