ஆன்மிகம்
பழனி கோவில்

பழனி கோவில் கந்தசஷ்டி விழாவுக்கு அனுமதி கிடைக்குமா?: பக்தர்கள் எதிர்பார்ப்பு

Published On 2021-11-02 08:42 GMT   |   Update On 2021-11-02 08:42 GMT
பழனியில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. இந்த ஆண்டாவது பக்தர்களுக்கு அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.
அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழனியில் நடக்கும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி விழாவும் ஒன்று. கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு நடந்த கந்தசஷ்டி விழாவில் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

விழாக்கள் அனைத்தும் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதனை பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர். தற்போது கொரோனா பரவல் குறைந்து வருவதால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கந்தசஷ்டி விழாவுக்கு பக்தர்கள் அனுமதி கிடைக்குமா? என எதிர்பார்க்கின்றனர்.

பழனியில் கந்தசஷ்டி விழா வருகிற 4-ந் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்குகிறது. 9-ந் தேதி பராசக்தி அம்மனிடம் வேல் பெற்று சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் பழனி கிரிவீதியில் நடைபெறும். மறுநாள் 10-ம் தேதியன்று மலைக்கோவிலில் முத்துக்குமார சாமி, வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறும்.

கந்த சஷ்டி விழாவின் போது ஏராளமான பக்தர்கள் விரதமிருந்து மலைக்கோவிலில் நிறைவுநாளன்று தங்கள் விரதத்தை முடித்து திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்வது வழக்கம் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்திய பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வரும் நிலையில் கந்தசஷ்டி விழாவுக்கு பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News