வழிபாடு
காமதேனு வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த அம்மன்.

பங்குனி உத்திரத் திருவிழா: காமதேனு வாகனத்தில் தெப்பக்குளம் மாரியம்மன்

Published On 2022-03-27 09:07 GMT   |   Update On 2022-03-27 09:07 GMT
மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழாவின் 2-ம் நாளில் காமதேனு வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் கோவில் மீனாட்சி அம்மன் கோவிலை சார்ந்த உபகோவிலாகும். இந்த கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 25-ந் தேதி தொடங்கியது. இந்த திருவிழா அடுத்த மாதம் 3-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவிலில் நடைபெற்று வரும் பங்குனி உத்திரத் திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காமதேனு வாகனத்தில் சரஸ்வதி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

விழாவில் சிகர நிகழ்ச்சியான பூப்பல்லக்கு ஏப்ரல் மாதம் 1-ந் தேதி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை மீனாட்சி அம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், இணை கமிஷனர் செல்லத்துரை ஆகியோர் செய்து வருகிறார்கள்.
Tags:    

Similar News