கதம்பம்
ஓஷோ

இறந்த பிறகு என்ன ஆவோம்..? - ஓஷோ

Published On 2022-01-19 09:28 GMT   |   Update On 2022-01-19 09:28 GMT
முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம். அதுபோல் முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம்!
ஒரு பிறவிக்கும், மறுபிறவிக்கும் இடையில் ஏற்படும் அனுபவங்கள் ஒரு கனவுபோலத்தான். அப்பொழுது அது உண்மையைப்போலத் தோன்றும்.

ஆத்மா சொர்க்கத்தை அடைவது அல்லது நரகத்தை அனுபவிப்பது என்பது இந்தக் கனவு நிலையைக் குறிப்பிடுவதுதான். உண்மையில் சொர்க்கமும் இல்லை, நரகமும் இல்லை!

முழுமையான பாப ஆத்மாக்களுக்குத் தகுந்த தாய், தகப்பன் கிடைப்பது மிகவும் கஷ்டம். அதுபோல் முழு புண்ணிய ஆத்மாக்களுக்கும் தகுந்த பெற்றோர்கள் கிடைப்பது கடினம்! இந்த இரண்டுக்கும் இடையில் உள்ள ஆன்மாக்கள் நல்லதும், கெட்டதும் கலந்திருக்கின்றன. இந்த ஆன்மாவில் முற்பிறவியில் ஏற்பட்ட அனுபவங்கள் கருத்துக்கள், தீய மற்றும் நல்ல செயல்களின் பலன்கள் அனைத்தும் கரு வடிவில் அப்படியே பதிந்திருக்கின்றன.

அது மீண்டும் உடலை எடுக்கும் பொழுது அவை அனைத்தும் மெல்ல செயல்புரிய ஆரம்பித்துவிடுகின்றன.

நமக்கிடையே உள்ள ஒரு அங்குல இடைவெளியில் பல ஆன்மாக்கள் நிறைந்து கிடக்கின்றன! 

ஒரு கெட்ட ஆன்மா ஒரு உடலுக்குள் பாய்வது எப்படி?

ஒருவன் மிகவும் பயந்த நிலையில் இருக்கிறான் என்று வைத்துக்கொள்வோம். அப்பொழுது அந்த உடல் தன் ஆத்மாவைச் சுருக்கிக் கொண்டுவிடுகிறது. அந்த நிலையில் அந்த உடலின் சில பாகங்கள் வெற்றுத்தன்மையில் இருக்கின்றன.

அப்பொழுது நம்மைச் சுற்றியுள்ள கெட்ட ஆவிகள் ஒன்றோ அல்லது பலவோ அந்த உடலுக்குள் பாய்ந்துவிடுகிறது. ஆனால் தைரியமானவர்களிடம் இது நெருங்காது. ஏனெனில் அவர்களிடம் வெற்றிடம் ஏற்படாது. 

ஒரு பயந்த ஆள் மிகவும் கீழான நிலையில் இருப்பதால் உயர்ந்த ஆன்மாக்கள் அந்த உடலுக்குள் புகாது. உயர்ந்த ஆன்மாக்கள் எப்பொழுதும் மேலான - உயர்ந்த நிலையில்தான் உலவிக் கொண்டிருக்கும். கீழான ஆத்மாக்கள்தான் கீழே உலவிக் கொண்டு தன் ஆசையைத் தீர்க்கத் துடித்துக்கொண்டிருக்கும். 

மாறாக ஞான ஆத்மா என்பது சுத்தமான உயிர்த்தன்மை. இந்த உயிர் மிகவும் மேலான நிலையை அடைந்து பிரபஞ்ச உயிர்த் தன்மையோடு கலந்துவிடுகிறது. இதற்கு மறுபிறவி கிடையாது. இது ஆசைகளற்ற ஆத்மா அல்லது உயிர்தன்மை. 

மற்றவை அனைத்தும் மறுபிறப்பு எடுத்துத்தான் தன் உலக ஆசைகளைத் துறக்க வேண்டும்.
Tags:    

Similar News

தம்பிடி
நாத்தனார்