ஆன்மிகம்
கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில்

அவிட்டம் நட்சத்திரக்காரர்களின் தோஷம் போக்கும் கோவில்

Published On 2020-10-20 06:14 GMT   |   Update On 2020-10-20 06:14 GMT
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இந்த கோவிலுக்கு வந்து வணங்கி வழிபட்டால் பிரச்சனைகள் தீரும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் வழிபட வேண்டிய தலம் கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் ஆகும். அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க கொடுமுடி மகுடேஸ்வரர் கோவிலுக்கு வந்து மகுடேஸ்வரரையும், சனி பகவானையும் வணங்கி வழிபட்டு செல்கின்றனர்.

பிரம்மாவுக்கு அவிட்டம் நட்சத்திரத்தன்று ஞானம் கிடைத்ததால் இத்தலம் அவிட்டம் நட்சத்திரத்திற்குரிய தலமானது. இந்த நட்சத்திரத்திற்கு உகந்த தெய்வம் மகுடேஸ்வரர் மற்றும் இத்தலத்தில் உள்ள நாகராஜர், சனீஸ்வரர் என ஜோதிட நூல்கள் கூறுகின்றன.

அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் அவர்கள் பிறந்த நட்சத்திரத்தன்று இந்த கோவிலுக்கு வந்து காவிரியில் நீராடி, மகுடேஸ்வரருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பின்னர் அம்பாளை வணங்கி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

கொடுமுடி கோவிலில் சனீஸ்வரர் ஒரு கையில் பாம்பும், ஒரு கையில் சூலாயுதமும் பிடித்தபடி காக வாகனத்தில் மேற்கு பார்த்த சன்னிதியில் வீற்றிருக்கிறார். இங்கு சனி தோஷம் உள்ளவர்கள் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும்.
Tags:    

Similar News