செய்திகள்
கோப்பு படம்

ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த வாலிபர் யார் அவர்? போலீசார் விசாரணை

Published On 2019-08-29 10:23 GMT   |   Update On 2019-08-29 10:23 GMT
ஈரோடு அருகே ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

ஈரோடு அடுத்த காவிரி ரெயில் நிலையத்திற்கும் ஆனங்கூர் ரெயில் நிலையத்திற்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக ஈரோடு ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இறந்த நபர் யார் ?எந்த ஊரைச் சேர்ந்தவர் ? என்ற விவரம் தெரியவில்லை.
Tags:    

Similar News