செய்திகள்
ஓசூர் அருகே பணம் வைத்து சூதாடிய 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
ஓசூர் டவுன் போலீசார் அட்கோ பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, அங்கு பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த அதே பகுதியை சேர்ந்த ராஜூ (வயது 35), காளேகுண்டா உசேன் (32), சமத்துவபுரத்தை சேர்ந்த சதீஷ் (38), பழைய வசந்த் நகரை சேர்ந்த குமார் (46) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து பணம் பறிமுதல் செய்யப்பட்டது.